FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்கு: தயார் நிலையில் சிறை நிர்வாகம்

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தயார் நிலையில் திகார் சிறை நிர்வாகம் உள்ளது.

Updated On : 20 மார்ச் 2020, 5:27 am IST
கோப்புப்படம்
பகிர்:


நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தயார் நிலையில் திகார் சிறை நிர்வாகம் உள்ளது.

தில்லியில் கடந்த 2012-இல் துணை மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை மார்ச் 20 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்படி, நால்வரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்படவுள்ளனர். இதற்கான தயார் நிலையில் சிறை நிர்வாகம் உள்ளது. குற்றவாளிகள் நால்வரும் தூக்கு மேடையை வந்தடைந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments