இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 341 ஆக உயர்ந்தது!
இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 332 ஆக இருந்த நிலையில் தற்போது 341 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் கரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.