சத்தீஸ்கரில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 88ஆக உயர்வு
சத்தீஸ்கரில் கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:04 PM
சத்தீஸ்கரில் கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது 35,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1,147 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 8,888 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சத்தீஸ்கரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.