தில்லியில் மேலும் 384 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,122ஆக உயர்வு
தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயித்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாதில்லியில் மேலும் 384 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,122ஆக உயர்வு
தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயித்தைத் தாண்டியுள்ளது.
தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயித்தைத் தாண்டியுள்ளது.
வேகமாக பரவி வரும் கரோனா நோய் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் முதல்கட்டமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், நோய்த் தொற்று கட்டுப்படாததால் மே 3-ஆம் தேதி வரை மேலும் 19 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, அமலிலுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தில்லியில் நேற்று மேலும் 384 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்துடன் தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,122ஆக உள்ளது. அவர்களில் 1,256 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். நாம் கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், அது நீண்ட காலத்துக்கு இருக்கும்". இவ்வாறு அவர் கூறினார்.