இந்தியா

தில்லியில் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகள்

சுமார் 40 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக இன்று பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுபானக் கடைகள் திக்குமுக்காடின.

ANI


புது தில்லி: சுமார் 40 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக இன்று பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுபானக் கடைகள் திக்குமுக்காடின.

இந்த நிலையில், தேசிய தலைநகர் தில்லியில், மதுபானக் கடைகளில், நீண்ட வரிசையில் நின்று குடிமக்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால், முன்னெச்சரிக்கை காரணமாக, தில்லியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே, கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறையினரே கடைகளை மூடிவிட்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை மதுபானக் கடைகளைத் திறக்க அரசு அனுமதித்திருந்தது. ஆனால், அரசு மதுபானக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளித்திருப்பது குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியவரவில்லை.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT