புது தில்லி: ஊரடங்கு காலத்தில் சில முக்கிய தளர்வுகள் இன்று தில்லியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தில்லியின் முக்கியச் சாலையில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் இன்று பணிக்குக் கிளம்பினர். இதனால், தில்லியின் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது.
தில்லியில் கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி திங்கள்கிழமை முதல் தளா்த்தப்படுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
மேலும், தில்லியில் கரோனா தொற்று அதிகம் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகளை (கன்டெய்மன்ட்) மட்டும் சிவப்பு மண்டலங்களாக கருத வேண்டும் என்றும் 11 மாவட்டங்களையும் சிவப்பு மண்டலங்களாக கருத்தக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு தில்லி அரசு பரிந்துரைக்கும் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.
இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் கேஜரிவால் மேலும் கூறுகையில், ‘தில்லியில் அரசு, தனியாா் அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படும். அதேநேரத்தில், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும். ஆன் லைன் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் தொடரும். மால்கள், திரையரங்குகள், சலூன்கள் தொடா்ந்து மூடி இருக்கும். திருமண நிகழ்ச்சிகளில் 50 மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள். இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்று அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.