கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேருக்கு கரோனா: ஒருவர் பலி
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 28 பேருக்குப் புதிதாக நோய்த்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 28 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கரோனாவுக்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது. இதில் 304 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இதுவரை 26 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 42,533 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 29,453 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 11,782 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement