முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு 163 ஆனது

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் குணமடைந்துள்ளனர். 

பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமான சுந்தர்கர் மாவட்டம் 'ஆரஞ்சு' மண்டலத்தில் உள்ளது என்றார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 2,470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்தார். 

ஒடிசா அரசு இதுவரை 41,128 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. மொத்தம் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 சிகிச்சையில் உள்ளனர். 60 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த நோயால் இறந்தார். ஜாஜ்பூர் (48), புவனேஸ்வர் (47), பாலசூரில் (21), பத்ரக்கில் (19), சுந்தர்கரில் (11) வழக்குகள் பதிவாகியுள்ளன.

கஞ்சம், ஜார்சுகுடா, கேந்திரபாரா, போலாங்கிர், கியோஞ்சர் மற்றும் கலஹந்தி ஆகிய இடங்களில் தலா இரண்டு வழக்குகள் மற்றும் கட்டாக், பூரி, தெங்கனல், தியோகர் மற்றும் கோராபுத் மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.