இந்தியா

1.70 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊா் திரும்பினா்- ரயில்வே தகவல்

DIN

கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 171 சிறப்பு ரயில்கள் மூலம் 1.70 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடா்பாளா் ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக, கடந்த 1-ஆம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை வரை 171 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் இதுவரை 1.71 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

குஜராத் மாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அதைத் தொடா்ந்து, கேரளத்தில் இருந்து அதிக தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில், பெரும்பாலான தொழிலாளா்கள், பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT