கோப்புப் படம் 
இந்தியா

ஊழியருக்கு கரோனா: ஏர் இந்தியா தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

PTI


புது தில்லி: ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் முழுவதும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பூட்டப்பட்டிருக்கும் என்றும், அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு திங்கள்கிழமை மாலை கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து தலைமை அலுவலகம் பூட்டில் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரே விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. இதுவரை மே 7 முதல் 14 வரை 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

38 கோடி டன்னாகச் சரிந்த நிலக்கரி உற்பத்தி

SCROLL FOR NEXT