கோப்புப் படம் 
இந்தியா

சிறையில் இருந்து மேலும் 900 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

IANS


காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்த மூன்று நாள்கள் போர் நிறுத்தத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்து வருகிறது.

தற்போது மேலும் 4 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமையன்று பக்ராம் சிறையில் இருந்து 100 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மிகப்பெரிய அளவில் சுமார் 900 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT