ஹிமாச்சலில் கரோனா பாதிப்பு 290-ஐ எட்டியது: மேலும் 9 பேருக்குத் தொற்று
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 290-ஐ எட்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 290-ஐ எட்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிய வழக்குகளில், ஹமீர்பூரைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாவர். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் கடந்த மே 26 அன்று சேகரிக்கப்பட்டதாக ஹமீர்பூர் துணை ஆணையர் ஹரிகேஷ்மீன் தெரிவித்தார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா சாதகமாக உள்ளது. அவர்களில் மூன்று பேர் மகாராஷ்டிராவின் தாணேவிலிருந்து வந்தவர்கள் ஆவார். மேலும் ஒருவர் தில்லியில் திரும்பியதாக காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் பிரஜாபதி தெரிவித்தார்.