முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் இதுவரை 1.74 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் 2816 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,330 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →