இந்தியா

“பிகாரில் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்”: சிராக் பாஸ்வான் கருத்து

DIN

பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நிதிஷ் குமார் பிகாரின் முதல்வராகப் போவதில்லை. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள்.” என்றார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி கட்சி பிகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT