இந்தியா

ஆமதாபாத் கட்டட விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

DIN

ஆமதாபாத் கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

குஜராத் ஆமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே உள்ள கிடங்கு ஒன்றில்  புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், மீட்கப்பட்ட 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

இந்நிலையில் ஆமதாபாத் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆமதாபாத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT