முகப்பு
இந்தியா

'பட்டாசுகளைத் தவிர்க்கவும்': முதல்வர் கேஜரிவால் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து இல்லங்களில் இருந்தவாறே தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் லட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிப்பதற்கு அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

இதனிடையே தில்லியில் உள்ள மக்கள் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

மேலும், ''கடந்த ஆண்டு பட்டாசுகளைப் புறக்கணித்த மக்களின் முடிவு நல்ல பலனை அளித்ததாகவும், இந்த ஆண்டும் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார். 

''தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தில்லி அரசு மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது. பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் வீடுகளில் இருந்தவாறே லட்சுமி பூஜை செய்ய வேண்டும். நானும் எனது அமைச்சர்களுடன் பூஜையில் பங்கேற்க உள்ளேன். இதனை ஒருசில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசில் இந்த முடிவால் நகரம் முழுவதும் நேர்மறையான எண்ணம் உருவாகும்'' என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →