இந்தியா

அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு மாற்றம்

DIN


கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதுபற்றி காவலர் ஒருவர் தெரிவித்ததாவது:

"ராய்கட் மாவட்டத்திலுள்ள அலிபக் சிறைக்கான கரோனா மையமாக உள்ளூர் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்குத் தொடர்பாக நீதிமன்றக் காவலில் உள்ள அர்னாப் கோஸ்வாமி செல்போன் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

நவம்பர் 4-ம் தேதி காவலில் எடுத்தவுடன் அர்னாப் கோஸ்வாமி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அவர் சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருவதை ராய்கட் குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்டறிந்தனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT