இந்தியா

கனடாவில் கட்டடத்திலிருந்து விழுந்த ஹைதராபாத் மாணவன் பலி

IANS


ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர், கனடாவின் டோரன்டோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த கட்டடத்திலிருந்து விழுந்து பலியானார்.

பன்யம் அகில், ஹைதராபாத்தின் வனஸ்தானிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். டோரன்டோவில் தான் வசித்து வந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் 27வது மாடியில், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவரது குடும்பத்தாருக்குக் கிடைத்த தகவலில், நவம்பர் 8-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. செல்லிடப்பேசியில் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார். இது குறித்து கனடாவில் உள்ள அவரது நண்பர்தான், ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்த அகில், கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத் வந்துவிட்டு, கடந்த மாதம்தான் கனடா திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT