‘கோவாவைக் கவனிக்காமல் தில்லியைக் கவனியுங்கள்’: கேஜரிவாலுக்கு கோவா முதல்வர் பதில்
“அரவிந்த் கேஜரிவால் தில்லி மாசுபாட்டைக் கவனிக்க வேண்டுமே தவிர கோவாவைக் குறித்து அல்ல” என கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
“அரவிந்த் கேஜரிவால் தில்லி மாசுபாட்டைக் கவனிக்க வேண்டுமே தவிர கோவாவைக் குறித்து அல்ல” என கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு நாள் தில்லி பயணத்திற்குப் பின் கோவா திரும்பிய மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விமரிசனம் செய்துள்ளார். கோவா மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசனம் செய்திருந்த நிலையில் இந்த விமரிசனத்தை சாவந்த் தெரிவித்துள்ளார்.
"எந்த மாநிலமும் தில்லியைப் போல மாசுபடுத்தப்படவில்லை. அவர்கள் முதலில் அதைப் பார்க்க வேண்டும். தில்லியில் உள்ளவர்கள் புதிய காற்றை சுவாசிக்க ஆசைப்படுகிறார்கள். கேஜரிவால் முதலில் தில்லி குறித்து கவலைப்பட வேண்டும். கோவா குறித்து அல்ல" என்று சாவந்த் தெரிவித்துள்ளார்.