ஒடிசாவில் சாலை விபத்து: தாய், மகன் பலி
ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குந்தா கிராமத்தில் வசிக்கும் மூவரும் பாலசூர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலை 16-இல் பின்னால் இருந்து வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இறந்தவர்கள் சுகா சேனாபதி(32) மற்றும் அவரது மூன்று வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருமாறு அந்த அதிகாரி கூறினார்.