முகப்பு
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
இந்தியா

சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் உ.பி. அரசு

உத்தரப்பிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா

சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் உ.பி. அரசு

உத்தரப்பிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
பகிர்:

லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமஸ்கிருதப் பள்ளிகளை நவீனப்படுத்தி மேம்பாடு அடையச் செய்யும் வகையிலான பணிகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

சமஸ்கிருத பள்ளிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னுரிமை அளிப்பதாக உத்தரப்பிரதேச சமஸ்கிருத சங்கத்தின் தலைவர் டாக்டர் வசஸ்பதி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.   

மேலும், உத்தரப்பிரதேச அரசு தமது அறிக்கைகளை சமஸ்கிருத மொழியிலேயே வெளியிடுவதாகவும் கூறினார். 

சமஸ்கிருதப் பள்ளிகளில் கணினி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 72 மாவட்டங்களில் உள்ள சமஸ்கிருதப் பள்ளிகளில்  உத்தரப்பிரதேச சமஸ்கிருத சங்கத்தின் சார்பில் கணினி வசதி ஏற்டுத்தப்பட்டது. எஞ்சிய பள்ளிகளில் இந்த முறை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் சமஸ்கிருத மொழியை எளிமையாக கற்கலாம் என்றும், கணினி அறிவும் புகுத்தப்படும் என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →