கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து அவர் தொடர்ச்சியாக விசாரணை அமைப்புகளின் காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாயன்று அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவினை, கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.