இந்தியா

தில்லியில் மரத்தில் பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம்

IANS

புது தில்லி: தென் கிழக்கு தில்லியில், சுக்தேவ் விஹார் பகுதியில் நியூ பிரண்ட்ஸ்
காலணியில் உத்தரப் பிரதேச சாலைவழி செல்லும் பேருந்து மரத்தில் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று அதிகாலை 3.22 மணியளவில் சுக்தேவ் விஹார் அருகே விபத்து குறித்து என்.எப்.சி காவல் நிலையத்திற்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தனர். 

உடனடியாக பி.சி.ஆர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடைந்து, காயமடைந்தவர்களை அருகில் உள்ள எய்ம்ஸ் மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT