முகப்பு
இந்தியா

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் பகுதிக்கு அருகே பகிப்பூர் என்ற கிராமத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை ஒன்று சேதமடைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் பகுதிக்கு அருகே பகிப்பூர் என்ற கிராமத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை ஒன்று சேதமடைந்துள்ளது. 

இதில் அம்பேத்கரின் சிலை கீழே விழுந்து கிடந்ததாக மணியார் பகுதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் யாதவ் தெரிவித்தார். 

சிலை தானாக வலுவிழந்து விழுந்ததா அல்லது வேண்டுமென்றே யாரேனும் இவ்வாறு செய்துள்ளார்களா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகக் கூறிய அவர், உடனடியாக அவ்விடத்தில் புதிய சிலை மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் சிலரும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →