சபரிமலையில் இதுவரை 39 பேருக்கு கரோனா பாதிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், காவல்துறையினர் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட இதுவரை 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், காவல்துறையினர் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட இதுவரை 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய வட்டாரங்களின்படி,
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவ.16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று பாதித்த 39 பேரில் 27 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர். அவர்கள் உடனடியாக கரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் சன்னதி வளாகங்களிலும், அடிப்படை முகாம்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் பாதிக்கப்பட்ட 39 பேரில் சன்னிதானம் (கோயில் வளாகம்) மற்றும் பம்பா மற்றும் நிலக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.
மண்டல பூஜை டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ளது. ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு, ஜனவரி 20-ஆம் தேதி வரை கோயில் நடை மூடப்படும். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்று தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.