முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 2.68 லட்சமாக உயர்ந்த கரோனா பாதிப்பு

தெலங்கானாவில் நவ.28-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
Telangana clocks 753 new COVID-19 cases, 3 deaths 
பகிர்:

தெலங்கானாவில் நவ.28-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 753 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.68 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,451ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 95.49 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 41,991 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 53.73 லட்ச சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.