முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,591 பேருக்குக் கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 15,591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 15,591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக  15,591 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 14,16513 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 424 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 37,480 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 13,294 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 11,17,720 ஆக உள்ளது. தற்போது 2,60,876 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →