மகாராஷ்டிரத்தில் மேலும் 13,395 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,93,884 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 358 பேர் பலியாகியுள்ளனர். 15,575 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 39,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 11,96,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,41,986 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement