முகப்பு
இந்தியா

உ.பி.யில் இரட்டைக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
இரட்டைக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
பகிர்:

ஹமிர்புர்: 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார், கடந்த 1995ஆம் ஆண்டு, காவல்துறை அதிகாரியின் வாகன ஓட்டுநர் அமர் சிங், மௌதா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பப்பு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ.26 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

பழிக்கு பழி வாங்கும் வகையில் இரு கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமர் சிங் மற்றும் பப்பு ஆகியோர் குண்டடிப்பட்டு பலியாகினர்.

இந்த வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையின்போதே 3 பேர் மரணமடைந்துவிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →