முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,226 பேருக்கு கரோனா; 337 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 15 அக்டோபர், 2020 at 9:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:08 PM

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. இதன்படி, மாநிலத்தில் இன்று 10,226 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,64,615ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 13,714 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,30,483 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 337 பேர் பலியாகினர். இதனால் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41,196 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.