முகப்பு
இந்தியா

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் உசேனுக்கு கரோனா

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 அக்டோபர், 2020 at 1:02 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களுடன் இருந்ததால் தாமும் கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், இதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவரின் அறிவுரையின்படி மருத்துவமனையில்  தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போது நலமுடன் இருப்பதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பிரசாரக்காரர்களில் சையத் ஷாஹனாவாஸ் உசேனும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.