இந்தியா

ஹைதராபாத்தில் கரோனாவுக்கு கணவர் பலி; மனைவி தற்கொலை

PTI


ஹைதராபாத்: கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கணவர் பலியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

58 வயதான நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை பலியானார்.

கரோனா பாதித்த கணவர் பலியானதைத் தாங்கிக் கொள்ள முடியாத 55 வயதாகும் அவரது மனைவி, அவர்கள் வசித்து வந்த வீட்டின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடற்கூராய்வுக்குப் பின் பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது கணவரின் உடலை ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நல்லடக்கம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT