மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 6,059 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,45,020 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,648 பேர் குணமடைந்துள்ளனர், 112 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,60,755 பேர் குணமடைந்துள்ளனர், 43,264 பேர் பலியாகியுள்ளனர். 1,40,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 88.8 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.