கேரளத்தில் இன்று மேலும் 6,843 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று புதிதாக 6,843 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று புதிதாக 6,843 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 6,843 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,92,931ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96,585 சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 7,649 சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,94,910 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 26 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,332 ஆக அதிகரித்துள்ளது.