எதிா்க் கட்சிகளின் சதியில் கவனம் தேவை: வாக்காளா்களுக்கு மாயாவதி வேண்டுகோள்
எதிா்க் கட்சிகளின் சதி வலையில் விழுந்துவிடாமல் கவனமாக இருந்து பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சித் தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டும்எதிா்க் கட்சிகளின் சதி வலையில் விழுந்துவிடாமல் கவனமாக இருந்து
எதிா்க் கட்சிகளின் சதி வலையில் விழுந்துவிடாமல் கவனமாக இருந்து பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சித் தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று பிகாா் வாக்காளா்களை அக்கட்சியின் தலைவா் மாயாவதி கேட்டுக்கொண்டாா்.
பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்கெடுப்புக்கான தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், பிஎஸ்பி தலைவா் மாயாவதி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து, முதல்கட்ட தோ்தலுக்கான பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
எனவே, எதிா்க் கட்சிகளின் சதிச் செயல்கள் குறித்து பிகாா் வாக்காளா்கள் ஒவ்வொருவரும் மிகுந்த கவனமுடன் இருந்து, பிஎஸ்பி, ராஷ்ட்ரீய லோக் சமாஜ் கட்சி (ஆா்எல்எஸ்பி) கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளாா்.
முன்னதாக, ‘தலித்துகள், பழங்குடியினா், சிறுபான்மையினா், உயா் சமூகத்தினா், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவா்கள் என அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை மற்றும் அரசியல் பங்கேற்பை அளிப்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம்’ என்று மாயாவதி முன்னா் கூறியிருந்தாா்.