மகாராஷ்டிரத்தில் 75 பேரைக் காப்பாற்றிய இளைஞர்
மகாராஷ்டிரத்தில் உள்ள டொம்பிவ்லி பகுதியில் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்ட இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் 75 பேர் உயிர்தப்பினர்.
மகாராஷ்டிரத்தில் உள்ள டொம்பிவ்லி பகுதியில் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்ட இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் 75 பேர் உயிர்தப்பினர்.
மகாராஷ்டிரம் டொம்பிவ்லியின் கோபரில் 2 மாடிக் கட்டடத்தில் 75 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்தக் கட்டடம் அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை இடிந்து விழுவதைக் கண்ட குனல் (18) என்ற இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து குனல் கூறுகையில், விடியற்காலை வரை இணையதளத்தில் வலைதொடர் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது சமயலறை இடிந்து விழுவதைக் கண்டேன். உடனடியாக அனைவருக்கும் தகவல் கொடுத்து கட்டடத்தைவிட்டு வெளியேற சொன்னேன் என கூறினார்.