வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் ஆர்ஜூனா வேட்புமனு தாக்கல்!
வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் ஆர்ஜூனா வேட்புமனு தாக்கல் பற்றி..
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
முதல் நாளில் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் தீவிரமாக தொடங்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். இது தவிர 232 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், பெரும்பாலும் அக்கட்சியின் செயலாளர்களே இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெகவின் ஆதவ் ஆர்ஜூனா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.