Three killed as two load carriers fall into gorge on Jammu-Srinagar National Highway 
இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமை லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ராம்பன் மாவட்டத்தில் காஷ்மீர் செல்லும் இரண்டு சுமை லாரிகள் சாலையிலிருந்து தவறி விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

PTI


ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ராம்பன் மாவட்டத்தில் காஷ்மீர் செல்லும் இரண்டு சுமை லாரிகள் சாலையிலிருந்து தவறி விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

டிக்டோல் அருகே சுமை லாரி மற்றும் கோழிகளை ஏற்றி வந்த லாரியும் சுமார் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று காலை 4 மணிக்கு நடந்துள்ளது. 

இந்த விபத்தில் 32 வயதான ஓட்டுநர் அகமது மற்றும் அவருடன் வந்த முகமது உஸ்மான் ஆகியோர் உயிரிழந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் ஏராளமான கோழிகளும் உயிரிழந்தன என்றார்.

இறந்தவர்கள் இருவரும், ராம்சூவின் மாகர்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  உடலை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று காவல் அதிகாரி தெரிவித்தார். 

மற்றொரு விபத்து, பானிஹால் அருகே சமஸ்வாஸில் சரக்கு லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 19 வயது இளைஞன் உயிரிழந்தார் மற்றும் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர். 

விபத்து நடைபெற்ற சரக்கு லாரி ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குச் சென்று கொண்டிருந்தது. அதிலிருந்த மூவரும் புல்வாமா மாவட்டத்தின் பாம்பூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT