வெப்பத்தைத் தணிக்க வருகிறது கோடை மழை! சென்னைக்கு எப்போது?
வெப்பத்தைத் தணிக்க கோடை மழை பெய்யவுள்ளது குறித்து...
தமிழகத்தில் வெய்யில் வாட்டிவதைத்து வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, விரைவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
”மார்ச் மாதம் துவக்கம் முதலே தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டு வரும் சூழலில், வளிமண்டலத்தில் கிழக்கு- மேற்கு என இருதிசை காற்று சந்திப்பின் காரணமாக மார்ச் 18 முதல் 21 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடைக்கால இடி மழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களிலும், மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் மார்ச் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி இயல்பாக நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் மார்ச் 20 ஆம் தேதி இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
கோடைக்கால இடிமழை என்பதால் பகலில் நல்ல வெய்யிலும் மாலை/இரவில் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்ககூடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
As the heat continues to swelter in Tamil Nadu, there is a possibility of rain soon due to a low-level atmospheric circulation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.