FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.3) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வட உள்கா்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஆக.3) நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை (ஆக.3) சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக காரைக்காலில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை 100.4, புதுச்சேரி 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: திங்கள்கிழமை (ஆக.3) குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments