இந்தியா

தாவூத் இப்ராஹிம் சாா்பில் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு

DIN

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பேச விரும்புவதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் முதல்வா் வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தான் துபையில் இருந்து பேசுவதாகவும், தாவூத் இப்ராஹிம் உங்களுடன் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

இதனிடையே, ‘முதல்வா் வீட்டை தகா்த்துவிடுவதாக தொலைபேசியில் பேசிய நபா் கூறியதாக வெளியாகும் செய்திகள் தவறானது’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் அனில் பரப் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT