முகப்பு
இந்தியா

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: 3,543 பேருக்குத் தொற்று, 10 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,861 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,27,892 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
Odisha reports record 3,861 new COVID-19 cases, 10 fresh fatalities
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,861 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,27,892 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 2,278 பேருக்கும், உள்ளூரில் 1,583 பேருக்கும் இன்று தொற்று பதிவாகியுள்ளது. 

இதுவரை ஒடிசாவில் 90,331 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 29,299 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொற்று காரணமாக 538 உயிரிழந்துள்ளனர். 

செப்டம்பர் 6-ம் தேதி ஒருநாள் பாதிப்பு 3,810 ஆக அதிகரித்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து 3,861 ஆக பதிவாகியுள்ளது. 

ஒரேநாளில் 10 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 556 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்த 30,919 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து 96,364 பேர் குணமடைந்துள்ளனர். 

ஞாயிறன்று 45,165 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் இதுவரை 21.43 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.