இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 740 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை உயர்வு

DIN

ராஜஸ்தானில் புதிதாக 740 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படடுள்ளது. மேலும் 7  பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி புதிதாக 740 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,968-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 8 பேர் குணமடைந்ததால், மொய்த்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80,490-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,199-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT