Mask compulsory in Thane dist 
இந்தியா

தாணேவில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம்

தாணே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

UNI

தாணே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல்லையெனில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அதைப் பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கிவிட்டனர். இதனால், நாளுக்கு நாள் கரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தரவில், 

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு, முகக்கவசம் அணியாதது ஒரு முக்கிய காரணமாகும். எனவே, அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.

பொதுவிடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தாணே நகராட்சி ஆணையர் டாக்டர் விபின் சர்மா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT