மகாராஷ்டிரத்தில் புதிதாக 22,543 பேருக்கு கரோனா: மேலும் 416 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 22,543 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 22,543 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 22,543 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,60,308 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 416 பேர் பலியாகியுள்ளனர். ஒரேநாளில் 11,549 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,40,061 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 2,90,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
மும்பை:
மும்பையில் புதிதாக 2,085 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,693 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,30,918 பேர் குணமடைந்த நிலையில், 8,147 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 30,271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.