உ.பி.யில் புதிதாக 6,239 பேருக்கு கரோனா; மேலும் 80 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 6,239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,12,036-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 68,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து இதுவரை 2,39,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 80 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,429-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.