தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா தொற்று
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து, இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது காய்ச்சலோ வேறு பிரச்னையோ இல்லை. நான் நலமுடன் உள்ளேன். விரைவில் பணிக்குத் திரும்புவேன்."
Advertisement
முன்னதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.