இந்தியா

நாட்டில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா; 1136 பேர் பலி

DIN

புது தில்லி: நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டில் ஒரே நாளில் 92,071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 9,86,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை கரோனா பாதித்த 48 ஆயிரம் பேரில், 37,80,108 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதித்த 1,136 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தற்போது 2,80,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 29,115 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரம் 95,733 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,846 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT