உ.பி.: லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பானிபட் பகுதியில் இருந்து பயணிகளுடன் வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அலிகார் - மொராபதாபாத் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மோது மோதியது.
இதில் 30 முதல் 40 வயதை சேர்ந்த நபர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.