முகப்பு
இந்தியா

உ.பி.: லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பானிபட் பகுதியில் இருந்து பயணிகளுடன் வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அலிகார் - மொராபதாபாத் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மோது மோதியது.

இதில் 30 முதல் 40 வயதை சேர்ந்த நபர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த நபர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.