முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

கேரளத்தில் வேளாண் துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Updated On : 23 செப்டம்பர், 2020 at 3:10 PM
வேளாண்மைத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM


கேரளத்தில் வேளாண் துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தித்தவர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி நடக்க அமைச்சர் சுனில் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

கேரளத்தில் இதற்கு முன்பு நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.